மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து மோதியதில், பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மணல்மேடு, இளந்தோப்பு கிராமம் வன்னியர் தெருவைச் சேர்ந்த காசிநாதன் மனைவி விஜயலெட்சுமி(62). இவர் இளந்தோப்பு பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில், சாலையைக் கடந்துள்ளார். அப்போது, கும்பகோணத்தில் இருந்து மணல்மேடு வழியாக சீர்காழி நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியதில் விஜயலெட்சுமி அவ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.