குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஓர் இளைஞர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஓர் இளைஞர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
 காடம்பாடி, புதிய நம்பியார் நகர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சிமெண்ட் என்ற பா. ரவிக்குமார் (24). இவர் மீது கொலை வழக்குகள் மற்றும் திருட்டுக் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில், ஒரு கொலை முயற்சி வழக்குத் தொடர்பாக வெளிப்பாளையம் போலீஸார் ரவிக்குமாரை கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
 இந்த நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் அளித்த பரிந்துரையின் பேரில், ரவிக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
 இந்த உத்தரவின்பேரில், ரவிக்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com