சீர்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் அண்மையில் இடம் ஆய்வு செய்தார்.
சட்டநாதபுரம் ஊராட்சி கேவிஎஸ். நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் செயல்படும் செவிலியரை கொண்டு இயங்கக்கூடிய துணை சுகாதாரநிலையம் அமையவுள்ளது. இதற்கான இடத்தை நாகை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது, அப்பகுதி மக்கள் இப்பகுதியில் ஏற்கெனவே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சேவை மைய கட்டடம் இருப்பதால் மாற்று இடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தினர். ஆய்வின்போது, மயிலாடுதுறை கோட்ட அலுவலர் கண்மணி, சீர்காழி வட்டாசியர் சபிதாதேவி, மண்டல துணை வட்டாசியர் பாபு, நில அளவை பிரிவு துணை ஆய்வாளர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.