வேதாரண்யம் பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் சனிக்கிழமை (மே 18) நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்தின் கோட்டப் பொறியாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வாய்மேடு 110 துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 18) பராமரிப்புப் பணி நடைபெறுவதால், இதன்மூலம் மின் விநியோகம் பெறும் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டம், ஆலங்காடு ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.