வைகாசி விசாகத்தையொட்டி, சிக்கல் சிங்காரவேலவருக்கு மகா அபிஷேகம் சனிக்கிழமை காலை (மே 18) நடைபெறுகிறது.
சிக்கல் நவநீதேசுவரசுவாமி திருக்கோயிலில் தனிச் சன்னிதி கொண்டு காட்சியளிக்கிறார் சிக்கல் சிங்காரவேலவர். சூரனை அழிக்க இத்தலத்தில் அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடமிருந்து முருகப் பெருமான் சக்திவேல் பெற்றார் என்பது இத்தலத்து ஐதீகம்.
முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் குறிப்பிடப்படும், வைகாசி விசாகம் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, வைகாசி விசாக நட்சத்திர நாளான சனிக்கிழமை காலை 11 மணிக்கு சிக்கல் சிங்காரவேலவருக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சண்முகார்ச்சனையும் நடைபெறுகின்றன.