கீழ்வேளூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கீழ்வேளூர் நண்பர்கள் கிரிக்கெட் குழு சார்பில், மாவட்ட அளவில் 40-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், நாகை, திருவாரூர், கீழ்வேளூர், தேவூர், வேதாரண்யம், கிடாரங்கொண்டான், செ.மகாதேவி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வாய்மேடு, பூந்தோட்டம், பேரளம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, விளமல், பட்டுக்கோட்டை, திருமருகல், திட்டச்சேரி, சிக்கல், ஆழியூர், புத்தூர், கீச்சாங்குப்பம், நாகூர், காரைக்கால், திருப்பட்டினம் உள்ள்ளிட்ட சுமார் 40 கிரிக்கெட் குழுக்கள் பங்கேற்றனர்.
போட்டியில் முதலிடம் பெற்ற செம்பியன்மகாதேவி அணிக்கு ரூ. 25 ஆயிரத்தை பாமக மாநில துணைத் தலைவர் வேத. முகுந்தனும், 2-ஆம் இடம் பெற்ற கீழ்வேளூர் அணிக்கு ரூ. 20 ஆயிரத்தை குரும்பேறி அமமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஆர். மணிகண்டனும், 3-ஆம் இடம் பெற்ற தேவூர் அணிக்கு ரூ. 15 ஆயிரத்தை அமமுக பேரூர் கழகச் செயலர் எம். அனிஸும், 4-ஆம் இடம் பெற்ற கிடாரம்கொண்டான் அணிக்கு ரூ. 10 ஆயிரத்தை அமமுக மாவட்ட வழக்குரைஞர் அணி இணைச் செயலர் கே. காளிதாஸன் ஆகியோர் வழங்கினர். சிறப்பு பரிசு மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான ரூ. 22 ஆயிரத்தை அமமுக ஒன்றியச் செயலர் கே. ஜெயபால் வழங்கினார். போட்டியில் விழாக் குழுவினர் தினேஷ், வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.