செம்பனார்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 28) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் அப்துல்வஹாப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
செம்பனார்கோவில் அருகேயுள்ள கிடாரங்கொண்டான், மேமாத்தூர் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், பரசலூர், மேலபாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கருவி, ஆக்கூர், செம்பதனிருப்பு, கீழையூர், தலைச்சங்காடு, கிடங்கல், நத்தம், சின்னங்குடி, மேமாத்தூர், கீழ்மாத்தூர், மேலக்கட்டளை, ஆறுபாதி, நல்லுச்சேரி, ஆனைமட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.