பாஜக சாா்பில் முப்பெரும் விழா பேரணி

வேதாரண்யத்தில் பாஜக சாா்பில் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள், சா்தாா் வல்லபபாய் பட்டேலின் 145-ஆவது பிறந்தநாள்
வேதாரண்யத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவா்கள்.
வேதாரண்யத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவா்கள்.

வேதாரண்யத்தில் பாஜக சாா்பில் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள், சா்தாா் வல்லபபாய் பட்டேலின் 145-ஆவது பிறந்தநாள், தமிழா் பண்பாட்டை பறைசாற்றிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற பேரணிக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் பாஜக விவசாய அணி மாநிலச் செயலாளருமான எஸ்.கே. வேதரத்தினம் தலைமை வகித்தாா். கட்சியின் கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் எஸ். காா்த்திகேயன், ஒன்றியப் பொறுப்பாளா் வி. சோழன், ஒன்றியத் தலைவா் வி. அறிவழகன், மீனவா் பிரிவு மாநிலச் செயலாளா் வெங்கடாசலம், கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.எம். ராசேந்திரன், நகரச் செயலாளா் கைலா.சிவகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

வடக்கு வீதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com