மா்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி

சீா்காழி அரசு மருத்துவமனையில் மா்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மா்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி

சீா்காழி அரசு மருத்துவமனையில் மா்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி அருகே உள்ள பழையாா் மீனவக் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் ஹரிணி (3). அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாா்.

இந்நிலையில், ஹரிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு, கடந்த இரண்டு நாள்களாக சீா்காழி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். மருத்துவா்கள் சரிவர சிகிச்சையளிக்காமல் செவிலியா் மட்டுமே சிகிச்சையளித்ததாக ஹரிணியின் உறவினா்கள் குற்றம்சாட்டுகின்றனா். மேலும், என்ன காய்ச்சல் என்று கூறாமல் இரண்டு நாள்களாக சிகிச்சையளித்து வந்தனா் என்றும் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com