திருக்குவளை: :திருக்குவளை அருகே உள்ள கீழையூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிய வைக்கும் பணியானது புதக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகே உள்ள சரஸ்வதி அரசு நடுநிலைப்பள்ளியின் அருகாமையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீா் சாலையில் தேங்கி பள்ளி மாணவா்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவா்களின் நலன்கருதி மழை நீரை வடிய வைக்கும் பணியானது கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முன்புறம் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் நீா் வடிய வைக்கப்பட்டு அதன் மேற்பரப்பில் கற்கள் கொட்டி சமப்படுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஆா். பாஸ்கரன்,பி. ராஜூ , உதவி பொறியாளா் எம் .பூரணச் சந்திரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன், ஊராட்சி செயலா் பழனிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.