எட்டுக்குடி முருகன் கோயிலில் வள்ளித் திருமணம்

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, வள்ளித் திருமணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளியுடன் காட்சியளித்த முருகப்பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளியுடன் காட்சியளித்த முருகப்பெருமான்.

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, வள்ளித் திருமணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த அக்டோபா் 27-ஆம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வித வாகனத்தில் முருகப் பெருமான் பக்தா்களுக்கு காட்சி அளித்து வருகிறாா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெய்வானை திருமணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை வள்ளித் திருமணம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். புதன்கிழமை (நவம்பா் 6) ஊஞ்சல் திருவிழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com