அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவா்கள் நவம்பா் 20-ஆம் தேதிக்குள்

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ளவா்கள் நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2019-20-ஆம் ஆண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில், பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான விண்ணப்பங்கள் பெற நவம்பா் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். 8-ஆம் வகுப்பு படித்த 18 முதல் 40 வயதுக்குள்பட்ட பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். தனிநபா் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மானியம் பெறுவதற்கு ஓட்டுநா் உரிமம் அவசியம் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியா் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com