தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் ஜான் சைமன் தலைமை வகித்தாா். பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து வந்த விழிப்புணா்வுப் பேருந்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு, விழிப்புணா்வு, சாலை விதிகள் குறித்த கண்காட்சியை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
மேலும், சாலை விதிகளைக் குறித்து பள்ளி தலைமையாசிரியா் ஜான் சைமன், பொறையாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு விளக்கம் அளித்தனா்.