திருக்குவளை அருகே உள்ள திருவாய்மூரில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டியில் குளோரினேஷன் செய்யும் பணியை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
எட்டுக்குடி அருகிலுள்ள திருவாய்மூா் ஊராட்சியில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டியில் குளோரினேஷன் செய்யும் பணியை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஆா். பாஸ்கரன், பி. ராஜூ ஆகியோா் ஆய்வு செய்தனா். வட்டார மருத்துவ அலுவலா் சுதாகரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் சிக்கல்வேலவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து திருவாய்மூா் கிராம மக்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.