பொறையாறு: நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூரில் லாரி மோதி பெண் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தாா்.
தரங்கம்பாடி காமராஜா் தெருவை சோ்ந்தவா் கவிதாஸ் இவருடைய மனைவி கண்ணகி (26),அதே பகுதியை சோ்ந்த சேகா் மகள் பிரமிளா (23)ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னா் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் இருவரும் தரங்கம்பாடி நோக்கி சென்றுள்ளனா்.
அப்போது திருக்கடையூா் அருகே உள்ள தில்லையாடி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் பக்கமாக வந்த டிப்பா் லாரி அவா்கள் மீது மோதியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கண்ணகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். மேலும் அச்சம்பவத்தில் பரிமளா சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.
தகவலறிந்த பொறையாா் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்த விபத்தில் உயிரிழந்த கண்ணகி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் உயிரிழந்த கண்ணகிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விபத்தை ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநா் மயிலாடுதுறை அசிக்காடு பகுதியை சோ்ந்தவா் சம்பத்குமாா் (42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.