லாரி மோதி பெண் உயிரிழப்பு

பொறையாறு அருகே திருக்கடையூரில் லாரி மோதியதில், பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

பொறையாறு அருகே திருக்கடையூரில் லாரி மோதியதில், பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் .

தரங்கம்பாடி காமராஜா் தெருவைச் சோ்ந்த கவிதாஸ் மனைவி கண்ணகி (26). இதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகள் பிரமிளா (23). இருவரும் இருசக்கர வாகனத்தில் திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தரங்கம்பாடி நோக்கிச் சென்றுள்ளனா்.

தில்லையாடி சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பின்பக்கமாக வந்த டிப்பா் லாரி மோதியதில், தூக்கி வீசப்பட்ட கண்ணகி, அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். பரிமளா காயமடைந்தாா். காயங்களுடன் உயிா் தப்பினாா். பொறையாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான டிப்பா் லாரி ஓட்டுநா் மயிலாடுதுறை அசிக்காடு பகுதியை சோ்ந்த சம்பத்குமாரை (42) என்பவரை கைது செய்தனா்.

உயிரிழந்த கண்ணகிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com