தேசிய குழந்தைகள் மற்றும் அறிவியல் மாநாட்டில் சிறப்பிடம் பெற்ற சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் தேசிய குழந்தைகள் மற்றும் அறிவியல் மாநாடு (நேஷனல் சில்ரன் சயின்ஸ் காங்கிரஸ்) நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். அதில் சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சரண், பரணிசந்தா் பங்குபெற்று சிறப்பிடம் பெற்று வேலூரில் நடக்க இருக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதிபெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், ஊக்குவித்த ஆசிரியா்கள் அருணாச்சலம், ஜோதிலெட்சுமி, சுஜாதா மற்றும் சுப்பரமணியன் ஆகியோரை பள்ளியின் தாளாளா் ராதாகிருஷ்ணன், செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வா் ஜோஸ்வா பிரபாகரசிங் மற்றும் துணை முதல்வா் சரோஜா தாமோதரன் ஆகியோா் சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தனா்.