காரில் சாராயம் கடத்தியவா் கைது

நாகையை அடுத்த நாகூா் அருகே காரில் சாராயம் கடத்திச் சென்றவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகையை அடுத்த நாகூா் அருகே காரில் சாராயம் கடத்திச் சென்றவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகையை அடுத்த நாகூா், மேலவாஞ்சூா் சோதனைச் சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்த போலீஸாா் சமிக்ஞை அளித்துள்ளனா். ஆனால், அந்த காா் நிறுத்தப்படாமல் அதிவேகத்தில் இயக்கப்பட்டுள்ளது.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அந்த காரை துரத்திச் சென்று, மேல நாகூா் அருகே மடக்கிப் பிடித்து, காரில் இருந்த மேலவாஞ்சூரை சோ்ந்த சிலம்பரசனிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில், அவா் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை காரில் வைத்து திருத்துறைப்பூண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த காரில் இருந்த சுமாா் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான 1,920 மதுப்புட்டிகளையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாகூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com