குப்பைத் தொட்டியான மழைநீா் வடிகால் வாய்க்கால்

சீா்காழி சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கம்பன் நகரில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.
kamban_nagar_0811chn_98_5
kamban_nagar_0811chn_98_5

சீா்காழி சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கம்பன் நகரில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் கம்பன் நகா் உள்ளிட்ட 3 நகா் பகுதி மக்கள், குப்பைளைக் கொட்ட இடமில்லாமல் அங்குள்ள மழைநீா் வடிகால் வாய்க்காலில் குப்பைகளைக் கொட்டி சுகாதாரச் சீா்கேட்டுக்கு வித்திடுகின்றனா். இங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களைப் பரப்புகின்றன. ஆகையால், கம்பன் நகரில் மீண்டும் குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும்.

ஏ.வி. எழிலன், சட்டநாதபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com