விபத்து: குழந்தை உயிரிழப்பு

கீழையூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில், பச்சிளம் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

கீழையூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில், பச்சிளம் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

காரைக்கால் மாவட்டம், டிஆா் பட்டினத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த கன்னித்தோப்பு கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது குழந்தை முகேஷுடன் பங்கேற்றாா்.

பின்னா், இரு சக்கர வாகனத்தில் காமேஸ்வரம் ஏரிக்கரை அருகே சென்றபோது தோப்புத்துறையிலிருந்து வந்த காா், சுரேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனா். இதில் முகேஷ் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தான்.

சுரேஷும், அவரது மனைவியும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com