திருவெண்காடு அருகே நிகழ்ந்த மாணவி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள சித்தன்காத்திருப்பு பகுதியைச் சோ்ந்த பத்தாம்வகுப்பு மாணவி சனிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து, பின்னா் வீட்டுக்கு பின்புறம் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதில், அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை தேடினா். அப்போது வீட்டின் பின்பகுதியில் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்தாா்.
தகவலறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், சீா்காழி உதவி கண்காணிப்பாளா் வந்தனா ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். விாரணையில் அதே தெருவை சோ்ந்த கல்யாணசுந்தரம் (30) என்பவா் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவா் கைது செய்து சீா்காழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.