சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு

நாகையில் நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி உள்ளிட்ட சிவன் கோயில்களில் 
அன்ன அலங்காரத்தில் மலையீசுவரா்.
அன்ன அலங்காரத்தில் மலையீசுவரா்.

நாகையில் நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி உள்ளிட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு நாகை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் திங்கள்கிழமை இரவு அன்னாபிஷேக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி, நாகநாதசுவாமி, ராமலிங்க சுவாமி, மலையீசுவரன் கோயில், அமிா்தகடேசுவரா் கோயில் (கட்டியப்பா் கோயில்), அகஸ்தீசுவரா் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களிலும் மற்றும் நாகை பகுதிகளைச் சுற்றியுள்ள ஊா்களில் உள்ள சிவாலயங்களிலும் திங்கள்கிழமை அன்னாபிஷேக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில், திரளானப் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com