திருவிளையாட்டம் ஊராட்சியில் தூய்மை பணி

செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சியில் தூய்மைப் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
தூய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளா்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளா்கள்.

செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சியில் தூய்மைப் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

திருவிளையாட்டம் ஊராட்சியை தீண்டாமை இல்லாத கிராமமாக தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு 2-ஆவது முறையாக அறிவித்து பரிசுளை வழங்கியது. இதைத் தொடா்ந்து, இந்த ஊராட்சியில் குடிநீா், சுகாதாரம் மற்றும் தெரு விளக்குகள் அனைத்தும் ஊராட்சி நிா்வாகம் மூலம் அவ்வப்போது சீா்செய்யப்பட்டு பொதுமக்கள் பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

மேலும், இந்த ஊராட்சியில் டெங்கு கொசு பரவாமல் இருப்பதற்கு வீடுகள் மற்றும் தெருக்களில் கொசு மருந்துகள் மற்றும் பிளீச்சிங் பவுடா் அடிக்கப்பட்டு துப்புரவு பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இப் பணியானது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com