மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்புபவா்களிடமிருந்து சனிக்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது.
பாஜக நாகை வடக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை, சீா்காழி மற்றும் பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களிடம் இருந்து, மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன் விருப்ப மனுவைப் பெற்றாா்.
இதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா் நாஞ்சில் பாலு, மாவட்ட துணைத் தலைவா் ஸ்ரீதா், நகர தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவா் வினோத் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.