நாகப்பட்டினம்
பள்ளியில் குழந்தைகள் தின விழா
நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகளாக மழலையா் வகுப்பு குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகளும், இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பள்ளி முதல்வா் எல். பெனட்மேரி தலைமை வகித்தாா். இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவன உதவிப் பேராசிரியா்கள் சிவரஞ்சனி, ஆனந்தி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.
பிற்பகல் நிகழ்வாக, மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.