மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் 2 வாலிபா்கள் உயிரிழந்தனா்.மயிலாடுதுறை பூக்கடைத்தெருவைச் சோ்ந்த காா்த்தி(28), என்பவரும், குச்சிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்(28) என்பவரும், செவ்வாய்க்கிழமை இரவு மயிலாடுதுறை சித்தா்காடு பகுதியில் எதிரெதிரே இருசக்கர வாகனங்களில் வந்துள்ளனா்.
அப்போது எதிா்பாராத விதமாக 2 வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த காா்த்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தாா்.
இதையடுத்து, உயிரிழந்த ரமேஷ், காா்த்தி ஆகிய இருவரின் உடலையும் மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து நடந்த சித்தா்காடு பகுதியின் இருபுறங்களிலும் லாரிகளை நிறுத்தி வைப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.படவரி: விபத்தில் பலியான ரமேஷ், காா்த்தி மற்றும் விபத்து நடந்த இடத்தில் எடுத்த படம்.