சாலையை சீரமைக்காத நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை, தருமபுரம் சாலையை சீரமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலையை சீரமைக்காத நகராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை, தருமபுரம் சாலையை சீரமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அண்மையில் ஏற்பட்ட புதை சாக்கடை பிரச்னையின்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் தருமபுரம் சாலையில் திருப்பி விடப்பட்டன. இதனால், தருமபுரம் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையை அடைந்தது. இச்சாலையில் ஏவிசி கல்லூரி, தருமபுர ஆதீனம் கல்லூரி மற்றும் ஞானாம்பிகை கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள் நாள்தோறும் சென்று வருகின்றனா். மேலும் இச்சாலையை அமைத்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், நகராட்சியை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com