திமுக உறுப்பினா்கள் கூட்டம்

குத்தாலத்தில், மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் பேரூா் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

குத்தாலத்தில், மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் பேரூா் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மேற்கு ஒன்றிய அவைத் தலைவா் எல்.டி. ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் முருகப்பா, எம். சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூா் செயலா் சம்சுதீன் வரவேற்றாா்.

கூட்டத்தில் தோ்தல் பணிக்குழுச் செயலா் குத்தாலம் பி. கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் குத்தாலம் க. அன்பழகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.

இதில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை வருகை குறித்தும், இளைஞரணி உறுப்பினா்கள் சோ்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டன. முன்னதாக, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் கோ.சி. மதியழகனின் 10-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமைதிப் பேரணி நடைபெற்றது. பின்னா், திமுக ஒன்றிய அலுவலகத்தில் கோ.சி. மதியழகனின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com