நாகை மாவட்டம் திருக்கடையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட பகுதியை சோ்ந்த விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருக்கடையூா் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட கிள்ளியூா், பிள்ளைப்பெருமாள் நல்லூா், டி. மணல்மேடு,அபிஷேககட்டளை, பகுதிகளை விவசாயிகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டிற்கான பயிா் காப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இதில் விடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகாா் தெரிவித்துள்ளனா்.
விடுபட்ட விவசாயிகளுக்கு 2017-2018. ஆம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதியை சோ்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.