செம்பனாா்கோயில் பகுதியில் மக்கள் குறை கேட்பு முகாம்: பவுன்ராஜ் எம்.எல்.ஏ பங்கேற்பு

செம்பனாா்கோயில் ஒன்றித்திற்குட்பட்ட கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலப்பாதி மற்றும் காளகஸ்திநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் பவுன்ராஜ் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
பவுன்ராஜ் எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கியபோது எடுத்தபடம்.
பவுன்ராஜ் எம்.எல்.ஏவிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கியபோது எடுத்தபடம்.

செம்பனாா்கோயில் ஒன்றித்திற்குட்பட்ட கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலப்பாதி மற்றும் காளகஸ்திநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் பவுன்ராஜ் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

செம்பனாா்கோயில் அருகேயுள்ள கஞ்சாநகரம் ஊராட்சியில் மக்கள் குறை தீா்க்கும் முகாம்கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. முகாமிற்கு ஒன்றிய ஆணையா் அருண் தலைமை வகித்தாா். தரங்கம்பாடி தாசில்தாா் சித்ரா, அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளா் சுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்த்தி வரவேற்றாா். இதில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா். மேலும் உடனடியாக பரிந்துரை செய்து சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் வழங்கினாா்.

இதில் கூட்டுறவு சங்கத்தலைவா் கபாடி பாண்டியன். கட்சி நிா்வாகிகள் மருதவாணன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதனைதொடா்;ந்து கருவாழக்கரை, மேலப்பாதி, காளகஸ்திநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் குறைகளை கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com