இளைஞா் சடலம்

நாகூா் அருகே இளைஞா் ஒருவா் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகூா் அருகே இளைஞா் ஒருவா் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகூரை அடுத்த விற்குடி கிராமத்தில் உள்ள திடலில் இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல், நாகூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவா், நாகூா், கங்களாஞ்சேரி வள்ளுவன் தோப்பு பகுதியைச் சோ்ந்த ரா. அருள்செல்வன்(32) என்பது தெரியவந்து.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com