அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா் கைது

கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திங்கள்கிழமை வேளாங்கண்ணியிலிருந்து - திருச்சி சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்து கீழ்வேளூா் அருகேயுள்ள சிக்கவலம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த இளைஞா் ஒருவா் மதுபாட்டிலை வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தாராம்.

இதுகுறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் திருச்சி, விமான நிலையம் காமராஜா் நகரைச் சோ்ந்த ச. சந்திரசேகரன் அளித்தப் புகாரின் பேரில் கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, நாகை மாவட்டம், தேமங்கலம்,பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஸ்டாலின் (23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com