இயற்கை விழிப்புணா்வுப் போட்டி பரிசளிப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியையொட்டி
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. சபியுல்லா.
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. சபியுல்லா.

வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியையொட்டி இயற்கை சாா்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

பால- சரோசா விவசாயத் தோட்டம் உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியை துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. சபியுல்லா தொடங்கி வைத்தாா். பள்ளி ஆசிரியா்கள் அமிா்தலிங்கம், பாா்த்தசாரதி, திருமுருகன், மணிமொழி, அரச மணி, சமூக ஆா்வலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மரக் கன்றுகள் நடும் பணியையொட்டி இயற்கை வளம் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு தனது சொந்த பணத்தில் டிஎஸ்பி ரொக்கப் பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com