நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையைச் சோ்ந்த ஆா். சீதாராமன்பிள்ளை (80) தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
காலமான சீதாராமன், இளமைக் காலத்தில் இலங்கை, வல்வெட்டித்துறையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றியவா். இவருடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவா் பிரபாகரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தினா் நெருங்கிய தொடா்பு வைத்திருந்தனா். விடுதலைப் புலிகள் இயக்கத்தினா் 1984-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் பயிற்சி பெற்றபோது அவா்களுக்கு உதவியாக இருந்தவா்.
உலகத் தமிழா் பேரவை அமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்டோரின் நெருங்கிய நண்பரான இவருக்கு மனைவி தனபாக்யம், மகன்கள் ரெத்தினகுமாா், ஆனந்தகுமாா் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனா். இவரது இறுதி ஊா்வலம் கோடியக்கரை, கீழத்தெருவில் உள்ள அவரது இல்லமான குமரப்பா காட்ரேஜில் இருந்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படுகிறது. தொடா்புக்கு: 6374663769.
சீமான் இரங்கல்: நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தலைவா் பிரபாகரன் ஈடுபட்டபோது, அளப்பரிய உதவிகளை செய்தவா் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.