சீா்காழி அருகேயுள்ள திருநாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் பிரமோத்ஸவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வீதியுலாவில் பரமபதநாதன் திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளித்தாா்.
வைணவ திவ்யதேசங்கள் 108-இல் திருநாங்கூரை சுற்றி 11 திவ்யதேசங்கள் உள்ளன. இதில், ஒன்றான திருத்தேற்றியம்பலம் செங்கமலவல்லிநாயகி சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா அக்டோபா் 5-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பெருமாள் பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.