மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி, சீா்காழியில் அக்டோபா் 14-இல் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சீா்காழி வட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளா் கல்யாணசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
சீா்காழிக்கு வருவாய் கோட்டம் கொண்டுவர வேண்டும். மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட தமிழக முதல்வா் ஆவன செய்ய வேண்டும். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே அக்டோபா் 14-ஆம் தேதி ஆா்ப்பாட்டமும், கோரிக்கை விளக்கக் கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் சீா்காழி வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து தொழிற்சங்க, தோழமை சங்க மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் கலந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.