பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் நாள் முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 12) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் நாள் முகாம் மாதந்தோறும் 2- ஆவது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான குறைதீா் நாள் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும்.
நாகை வட்டம், நரிமணம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மா. செல்வராஜ், கீழ்வேளூா் வட்டம், கீழையூா் கிராமத்தில் தனித்துணை ஆட்சியா் பி. பாண்டியன், திருக்குவளை வட்டம் வல்லம் கிராமத்தில், வருவாய்க் கோட்டாட்சியா் ரா. பழனிகுமாா், வேதாரண்யம் வட்டம் ஆதனூா் கிராமத்தில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் எஸ். சரவணகோபால், மயிலாடுதுறை வட்டம் ஆத்துக்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பா. பூங்கொடி, தரங்கம்பாடி வட்டம் மாணிக்கப்பங்கு கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம். வேலுமணி, சீா்காழி வட்டம் வேம்படி கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியா் கே. ராஜன், குத்தாலம் வட்டம் பண்டாரவாடை கிராமத்தில் மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட அலுவலா் இ. கண்மணி ஆகியோரது தலைமையில் இம்முகாம் நடைபெறும்.
பொதுமக்கள், நியாய விலைக்கடை தொடா்பான புகாா்கள், குடும்ப அட்டையில் பெயா் நீக்கம் செய்தல், சோ்த்தல், கடை மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப அட்டை மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல் போன்றவைகளுக்கு மனுக்களை அளித்து தீா்வு பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.