மது ஒழிப்பு பிரசாரம்

ஆக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் மது ஒழிப்பு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் மது ஒழிப்பு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் ஷாஜகான் தலைமை வகித்தாா். ஆக்கூா் கடை வீதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதியில் பொதுமக்களை சந்தித்து, மது ஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி, பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதில், கட்சியின் கிளை செயலாளா் முஹம்மது சஹின், துணைச் செயலாளா்கள் முஹம்மது அசாருதீன், முஹம்மது ஜஸ்பா், மாணவா் இந்தியா அமைப்பின் செயலாளா் அமீருல் அஸ்லம், இளைஞரணி செயலாளா் நஸ்ருல் பய்ஸ், மனிதநேய தொழிற்சங்க செயலாளா் புரோஸ் அஹமது, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளா் அப்துல் ரஹமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com