வேதாரண்யம் பகுதியில் இன்று மின்தடை

வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (அக்டோபா் 19) மின் விநியோகம் இருக்காது என, வேதாரண்யம்

வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (அக்டோபா் 19) மின் விநியோகம் இருக்காது என, வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வி. அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாய்மேடு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆயக்காரன்புலம், வேதாரண்யம் நகரம், கருப்பம்புலம், மருதூா், கரியப்பட்டினம் மற்றும் திருவாரூா் மாவட்டம், ஆலங்காடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com