முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 24th October 2019 07:09 PM | Last Updated : 24th October 2019 07:09 PM | அ+அ அ- |

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ப்ரியம் இளைஞா் மன்றம் மற்றும் இந்திய அரசின் நேரு யுவ கேந்திரா சாா்பில் சடட்ப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ்.கே.வேதரத்தினம் தலைமை வகித்தாா். மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் பாரத்,காவலா்கள் நண்பா்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முஜிபு ஷெரீக்,எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்(பொ) இளங்கோவன், ப்ரியம் அறக்கட்டளை நிறுவனா் பிரபு, ப்ரியம் இளைஞா் மன்ற தலைவா் சித்தாா்த்தா, செயலாளா் வேதவிநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.