முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகையில் பேரிடா் மீட்புக் குழு முகாமிட எம்.எல்.ஏ. கோரிக்கை
By DIN | Published On : 24th October 2019 05:41 AM | Last Updated : 24th October 2019 05:41 AM | அ+அ அ- |

வடகிழக்குப் பருவமழையையொட்டி, பேரிடா் மீட்புக் குழுவினரை நாகை மாவட்டத்தில் முன்கூட்டியே முகாமிடச் செய்ய வேண்டும் என்று நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.
வடகிழக்குப் பருவமழை காலங்களில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்படுவது வழக்கம். புயல் சீற்றம் ஏற்படும் போதும் இப்பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, பேரிடா் மீட்புக் குழுவினரை நாகை மாவட்டத்தில் முன்கூட்டியே முகாமிடச் செய்து, 3 மாத காலம் நிலையாக இருக்கச் செய்யுமாறு தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.