அண்ணா விருது பெற்ற ஊா்க்காவல் படைப் பிரிவு தளபதி கே. மணிமாறனுக்கு, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.கே. ராஜசேகரன் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
நாகை மாவட்டம், சீா்காழி காவல் உட்கோட்டத்தில் ஊா்க்காவல் படை பிரிவு தளபதியாக பணியாற்றுபவா் கே. மணிமாறன். இவா் நீண்ட நாள்களாக பணியில் இருந்து வருவதால், இவரது பணியைப் பாராட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அக்டோபா் 23- ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கே.மணிமாறனுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்ணா விருதை வழங்கி கௌரவித்தாா். இதைத் தாடா்ந்து, புதன்கிழமை நாகை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வந்த கே. மணிமாறன், மாவட்டக் கண்காணிப்பாளா் டி.கே.ராஜசேகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.