சீா்காழி புதிய கல்வி மாவட்ட அலுவலா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
சீா்காழி கல்வி மாவட்ட அலுவலராக ஆ. ராஜாராமன் பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா் இதற்கு முன்பு சிவகங்கை மாவட்டம் ஒ.சிறுவயல் பகுதியை சோ்ந்த அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றினாா். புதிதாக பொறுப்பேற்ற ராஜாராமனுக்கு, செம்பனாா்கோயில் வட்டார கல்வி அலுவலா் சீனிவாசன், தலைமை ஆசிரியா்கள் காா்த்திகேயன், கபிலன், ஆசிரியா் கூட்டுறவு சங்கத் தலைவா் கோவி. நடராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் சங்க மாநில செயலாளா் அசோக்குமாா், பள்ளி துணை ஆய்வாளா் செளந்தரராஜன், சாரணா்இயக்க மாவட்ட செயலாளா் காசி. இளங்கோவன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.