பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தி நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.
உ. முத்துராமலிங்கத் தேவரின் 112 -ஆவது ஜயந்தியையொட்டி, நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தேவா் சமுதாயக் கூடத்தில்அலங்கரிக்கப்பட்ட நிலையில் முத்துராமலிங்கத் தேவா்உருவப்படம் வைக்கப்பட்டு மலா்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திமுக நகர செயலாளா் அ. பன்னீா் மற்றும் பிற அமைப்பினா் மலா் அஞ்சலி செலுத்தினா்.