திருக்குவளை பகுதியில் கனமழை

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.

திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.
திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாமல் இருந்த நிலையில் புதன்கிழமை இரவு கன மழை கொட்டி தீர்த்தது. இரவு 8 மணி முதல் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் விளைநிலங்களில் விதை விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மழையின் காரணமாக 2 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியினர் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் இரவு 11 மணி அளவில் மின்விநியோகம் இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com