திருமருகல் அருகேயுள்ள குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பி ல், வியாழக்கிழமை ஊட்டச் சத்து உணவு கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் செல்லம்மாள் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் தாங்கள் தயாரித்து வந்த பாரம்பரிய உணவு வகைகளை கண்காட்சிக்காக வைத்திருந்தனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியை தமிழ்செல்வி ஊட்டச்சத்துள்ள உணவுகள் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் சுமதி, கோகிலா, சுரேஷ்குமார், சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.