காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை, சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை, சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  அகில இந்திய செயலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான ஸ்ரீவல்லபிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் ராஜேந்திரன், வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி. அன்பழகன், மற்றும் நிர்வாகிகள் ஜி. சரத்சந்திரன், பத்மநாபன், ஜி. அன்பானந்தன், வி. கிரிஜா, நவாஸ், முத்து. சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்
ஸ்ரீவல்லபிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக மக்கள், பாஜகவை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இதற்கு நடந்து முடிந்த மக்களவை பொதுத்தேர்தல், வேலூர் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை சாட்சியாகும். தமிழகத்தில் மக்கள் நலனை புறக்கணித்து, எடப்பாடி அரசு செயல்படுகிறது. அதிமுக அரசு மக்கள் நலப்பிரச்னைகளை கையாள்வதில் முற்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எடப்பாடி அரசு அஞ்சுகிறது. நவம்பரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ளாட்சி தேர்தல் வரும். நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில், திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றார் அவர். 
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம், செப். 23: வேதாரண்யத்தில் சட்டப் பேரவை தொகுதி அளவிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உப்பு சத்யாகிரகப் போராட்ட நினைவுக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின்  நாகை மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய கமிட்டி உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான பி.வி. ராசேந்திரன் முன்னிலை வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் டாக்டர் ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு கமிட்டியின் பொதுச் செயலளர் கீழானூர் ராசேந்திரன் ஆகியோர் பேசினர். 
மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்டாரச் செயலாளர் ஜெகநாதன், முன்னாள் தலைவர் கணேசன், பஞ்சாயத்ராஜ் கமிட்டியின் நாகை மாவட்டத் தலைவர் ஆரோ. பால்ராஜ், வட்டாரத் தலைவர் எம். ஜெய்லாணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சி.கே. போஸ், நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைரம், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன், சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகி சோட்டாபாய் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
கீழ்வேளூரில்..
திருக்குவளை,செப்.23: கீழ்வேளூர் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் கீழ்வேளூர் தனியார் திருமண அரங்கில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது .
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர்  ஆர்.என். அமிர்தராஜா தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சையதுபிக்கின், நகரத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  செயலாளர்  ஸ்ரீவல்ல பிரசாத் சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் கனகராஜ், சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர்  நவ்ஷாத், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவர் இராமலிங்கம், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com