மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தேர்வான நாகை மாவட்ட அணியைச் சேர்ந்த மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான 18 வயதுக்கு உள்பட்டோருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு, நாகை மாவட்ட கூடைப்பந்து மாணவிகள் அணி அண்மையில் தேர்வு செய்யப்பட்டது.
இந்த மாணவிகள் திருச்சி தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் செப்டம்பர் 19 முதல் 24 வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை, மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையத்தின் சீனியர் கூடைப்பந்து பயிற்சியாளர் மணிவாசகம், உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் மற்றும் நாகை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் வை.பாரதிதாசன் ஆகியோர் பாராட்டினர்.