திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து குதிரை உயிரிழந்தது.
திருமருகல் ஒன்றியம், மருங்கூர் அக்ரஹாரத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் வளர்த்து வந்த குதிரை அருகில் உள்ள வயலில் திங்கள்கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தாழ்வாக இருந்த மின் கம்பி குதிரையின் மீது உரசியதால், மின்சாரம் பாய்ந்து குதிரை உயிரிழந்தது. மருங்கூர் ஊராட்சியில் பெரும்பாலான மின் கம்பங்கள் சாய்ந்தும், மின் கம்பிகள் தாழ்வான நிலையிலும் உள்ளன. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.